சீனாவில் அதிகரித்த வெப்பம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்..!
சீனாவில் மீண்டும் கடுமையான வெப்பம் அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் கன்சு, ஷான்ஸி, அன்ஹு, ஜியான்சு, உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்ப நிலையானது 35 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பகல் வேளையில் வெளிப்புறங்களில் நடக்கும் பணிகளை ஒத்தி வைக்குமாறு உள்ளூர் நிர்வாகங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் தன்னார்வ மீட்புப் படையினரை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் நான்கு நிறங்களில் எச்சரிக்கை செய்தி விடுக்கப்பட்டது வழக்கம். சீனாவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த கோடையில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், நீர் நிலைகள வடு காணப்படுகின்றன.
நீர் மின்சாரம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஏரிகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, மின் உற்பத்தி குறைந்துள்ளது.
அதையடுத்து, மின்சாரத்தை சேமிக்கும் நடவடிக்கைகளில் சீன அரசு இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் மின்சாரத்தை ரேஷன் முறையில் பிரித்து வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.