வீரர்கள் படுகொலை அதிகரித்துள்ளது – பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம்
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதற்காக, பல்வேறு தீவிரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் கடந்த 6 மாதங்களில் 434 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் அதில் 300 மேற்பட்ட வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மேலவையின் உள்துறை அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில் கைபர் பக்துன்வா மாகாணம் பாதுகாப்புப் படையினர் மீது அதிக எண்ணிக்கையிலான தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்து உள்ளது. நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 247 தாக்குதல்கள் நடந்துள்ளன.
சிந்துவில் 12 தாக்குதல்கள் நடந்துள்ளன. குறைந்தபட்சமாக பஞ்சாப்பில் ஒன்று, இஸ்லாமாபாத்தில் 3 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. மொத்தம் 6 மாதங்களில் 434 தாக்குதல்கள் நடந்துள்ளன. தீவிரவாத தாக்குதல்களில் குறைந்தது 323 பாதுகாப்புப் படைகள் மற்றும் பிற நிறுவனங்களைச் சேர்ந்த வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்