முன்விரோதம் காரணமாக 3 பேருக்கு பார்சலில் மண்டை ஓடு அனுப்பி வைத்த நபர் கைது…!
கூரியார் பார்சலில் மண்டை ஓடு அனுப்பப்பட்ட விவகாரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்:
நேற்று தஞ்சையை அடுத்துள்ள முகமது பந்தர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது காசிமுக்கு மண்டை ஓடு அனுப்பப்பட்ட நிலையில்,
தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் மற்றும் சவுக்கத்தலி ஆகியோருக்கும் மண்டை ஓடு அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனித நேய ஜனநாயக கட்சியின் தஞ்சை பிரமுகர் அப்துல்லா மற்றும் முகமது முபின் ஆகியோர் முன்விரோதம் காரணமாக, அவர்களை அச்சுருத்தும் வகையில் 3 பேருக்கு மண்டை ஓட்டை அனுப்பியது தெரிய வந்துள்ளது கைது செய்த இருவரிடமும் திருவையாறு போலிசார் விசாரித்து வருகின்றனர்