தகாத உறவினால் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை..!

சிவகாசியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை! 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!திருமணமான பெண்ணிடம் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை…

சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த சுந்தர பாண்டியன் (வயது 36). இவர் சிவகாசி புறவழிச்சாலையில் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கும் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளராக பணியாற்றி வந்தார். 

சுந்தரபாண்டியன் வழக்கம்போல் தனது பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது நிறுவனத்தின் வெளியே உலர வைத்த  சம்பிராணியை எடுத்து நிறுவனத்தினுள் வைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது சுந்தர பாண்டியை சுற்றி வளைத்த 5 பேர் கொண்ட கும்பல் சாக்கு பையில் கொண்டு வந்த அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தலை மற்றும் உடலில் சரமாரியாக வெட்டியுள்ளனர். 

சுந்தர பாண்டியனனின் அலறல் சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியே வந்ததை தொடர்ந்து கொலை வெறி சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனங்களில் ஏறி சென்று தப்பி ஓடியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுந்தர பாண்டியனை  மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தர பாண்டியன் உயிரிழந்தார். 

சம்பவம் நடந்த இடத்தை விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், சிவகாசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.  போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் திருமணமாகாத சுந்தரபாண்டியனுக்கு ஏற்கனவே திருமணமான 45 வயது பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளாதகவும், அதன்  காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. 

இக்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் பல்வேறு கோணங்களில்   தீவிர விசாரணை நடத்தி தப்பி ஓடிய கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர் வருகின்றனர். பட்டப் பகலில் வாலிபர் ஒருவர் மர்ம கும்பலால் ஆயுதங்கள் கொண்டு தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *