பொதுகூட்டம், ஆர்பாட்டம், போராட்டம் நடத்த கூடாது… வியாபாரிகள் போலீசாரிடம் புகார்…!
ஆரணி பஜார் வீதியில் அரசியல் கட்சியினர் பொதுகூட்டம் ஆர்பாட்டம் போராட்டம் நடத்தினால் அன்று ஒருநாள் வியாபாரிகள் கடையடைப்பு நடத்தபடும் என்று ஆரணி வணிகர் சங்கத்தினர் டி.எஸ்.பி ரவிசந்திரனிடம் புகார் மனு அளித்ததால் பரபரப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் முக்கிய வீதிகளாக காந்தி ரோடு மண்டி வீதி சத்தியமூர்த்தி சாலை மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வணிகர்கள் சம்மந்தமாக அனைத்து கடைகள் இயங்கி வருகின்றன.
மேலும் இந்த சாலையில் மளிகை கடை மெடிகல் ~hப் காய்கறி அங்காடி இறைச்சி கடை அரிசி மண்டி பேக்கரி ஸ்வீட்ஸ் கடை உள்ளிட்டவைகள் இயங்கி வருவதால் எப்போதும் கூட்ட நெரிசலாகவும் பரபரப்பாகவும் இயங்கி வருவது வழக்கம். இந்நிலையில் பல ஆண்டுகளாக அனைத்து அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென்றாலும் போராட்டம் ஆர்பாட்டம் நடத்துவது என்றாலும் ஆரணி அண்ணாசிலை மணிகூண்டு எம்.ஜி.ஆர் சிலை ஆகிய முக்கிய வீதிகளில் நடத்தபட்டு வருகின்றன.
மேலும் அண்ணாசிலை மணிகூண்டு அருகில் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்பாட்டம் போராட்டம் கட்சியினர் நடத்துவதால் காந்தி சாலை மண்டி வீதி மார்க்கெட் வீதி ஆகிய பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகின்றன. இதனால் வியாபாரிகள் மிகவும் சிரமத்துடன் உள்ளாயி வருகின்றனர்.
இது சம்மந்தமாக ஆரணி அனைத்து வியாபாரிகள் ஓன்றுணைந்து தமிழக முதல்வரி தனிப்பிரிவு மாவட்ட ஆட்சியர் கோட்டாச்சியர் ஆகிய இடங்களில் புகார் மனு அளித்தும் இதுவரையில் எந்த ஓரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை ஆகையால் மணி கூண்டு மற்றும் அண்ணாசிலை அருகில் பொதுக்கூட்டம் மற்றும் போராட்டம் நடத்தினால் அன்று ஓருநாள் அனைத்து வியாபாரிகள் ஓன்றுணைந்து கடையடைப்பு நடத்தபடும் என்று ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரனிடம் ஆரணி வியாபாரி சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். இச்சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.