ஆளுநர் ஆர்.என். ரவியின் காரை குதிரைகள் வழிமறித்ததால் பரபரப்பு..!
உதகையிலிருந்து வயநாடு புறப்பட்டு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் காரை குதிரைகள் வழிமறித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
5 நாள் பயணமாக உதகைக்கு வந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை குடும்பதினருடன் கல்லட்டி மலைபாதை வழியாக கூடலூர் சென்று வயநாடு செல்ல காரில் புறப்பட்டு சென்றார். அவரது கார் தலைகுந்தா பகுதியில் சென்ற போது திடீரென 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் அவரது காரை வழி மறித்தன.
இதனால் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் சென்ற அவரது கார் நிறுத்தபட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலிசார் குதிரைகளை அங்கிருந்து விரட்டினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் ஆளுநர் கல்லட்டி மலைபாதை வழியாக வயநாடு சென்றார்.