கூட்டம் கூட்டமாக குவியும் காட்டு யானைகள்… ஓசூரில் பரபரப்பு…!

ஓசூர் அருகே சான மாவு வனபகுதிக்கு மேலும் 20 காட்டு யானைகள் புதிய வரவு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு பகுதியில் ஒரு வார காலமாக 60 காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ள நிலையில் மேலும் புதியதாக 20 காட்டு யானைகள் இன்று காலை வந்து சேர்ந்தது இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்

கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப் பகுதியில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக 200க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தமிழகத்திற்குள் இடம் பெயர்ந்தது இவைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை ஓசூர் வானப் பகுதியில் தஞ்சம் அடைந்து கொண்டு இரவு நேரங்களில் அருகே உள்ள விளைநிலங்களில் புகுந்து பயர்களை சேதப்படுத்தி வருகிறது

இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக சானமாவுவனப் பகுதியில் 60 யானைகள் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் இன்று காலை மீண்டும் ஊடேதுர்க்கம் வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து சானமாவு வனப்பகுதிக்கு வந்து சேர்ந்து தற்போது 80 காட்டு யானைகள் வனப்பகுதியில் உள்ளதால் அருகே உள்ள கிராம பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *