இந்து மக்கள் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் போலீஸ் ஏட்டு உள்ளிட்ட ஏழு பேர் கைது.

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனையில் கொலை நடந்ததாக போலீசார் தகவல். மதுரை சோலையழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர்  மணிகண்டன் (வயது 40) எம்.கே.புரத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார், மேலும் இவர்  இந்து மக்கள் கட்சியில் தென் மாவட்ட துணை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார், 

இந்நிலையில்  கடந்த 31.01.2023 அன்று இரவு கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த  மர்ம நபர்கள் கல் மற்றும் அறிவாளால் கொடூரமாக தாக்கியுள்ளனர், இதில் படுகாயமடைந்த மணிகண்டன்  மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார், ஆனால் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், கொலை வழக்கு பதிவு செய்த ஜெய்ஹிந்தபுரம்  காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயிந்தபுரம் காவல் நிலையத்தில் லேட்டாக பணிபுரியும் ஹரிஹரன் என்பவர் மணிகண்டன் இடம் ஐந்து லட்ச ரூபாய் பணம் கொடுத்து இருந்ததாகவும் பணத்தை திருப்பி கேட்ட பொழுது மணிகண்டன் பணத்தை தராமல் ஏமாற்றியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் 

மணிகண்டன் தனக்குத் தெரிந்த ரவுடியான பல்லு கார்த்தி என்பவரிடம் கூட்டு சேர்ந்து இந்த கொலையை  செய்திருப்பது தெரியவந்தது இதனை தொடர்ந்து போலீசார் ஹரிஹரன், பல்லு கார்த்தி ,மணி ,ஹைதர் அலி, அழகு பாண்டி ,ஐயப்பன் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *