பருவமழை இல்லாததால் மிளகாய் செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை

தென் மாவட்டத்தில் அதிகம் அளவில் மிளகாய் பயிரிடும் பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதி உள்ளது இங்கு பிரதான பயிராக மிளகாய் விவசாயம் பயிரிடப்படுகிறது  விளாத்திகுளம் பகுதி முழுவதும் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பருவ மழையை நம்பியே விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் கடந்த ஆண்டு வழக்கம் போல் விவசாயிகள் விவசாய பணிகள் ஈடுபட்டனர். இதில் சில பகுதிகளில் விவசாயிகளுக்கு சிறிதளவு நஷ்டமும் பல பகுதிகளில் விளைச்சல் எதுவுமின்றி விவசாயிகள் கவலையடைந்தனா இருப்பினுமா இந்த ஆண்டும் பருவ மழையை நம்பி விளாத்திகுளம் அதன் சுற்றுவட்டார பகுதியான புதூர், நாகலாபுரம், அரியநாயகபுரம், சூரங்குடி, குருவார்பட்டி, பிள்ளையார் நத்தம், கழுகாசலபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட  பகுதிகளில்  விவசாயிகள் கம்பு, வெள்ளை சோளம், சிகப்பு சோளம், வெங்காயம், மிளகாய் உள்ளிட்டவை பயிரிட்டுள்ளனர். 

இதில் அதிக அளவில் மிளகாய் பயிரிட்டு இருந்தனர் பயிரிடும் நேரத்தில் சிறிதளவு மழை பெய்தது  பயிர்கள் வளர்ச்சி காலத்தில் பருவமழை எதுவும் இல்லாததால் தற்போது மிளகாய் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

செடியில் காய்த்த காய்களும் போதிய சத்து இல்லாமல் செடியிலிருந்து உதிர்ந்து வருகிறது.மேலும் செடியிலே பழுத்து அழுகிவிடுகிறது.

இது குறித்து  விவசாயிகள் கூறுகையில் : கடந்த ஆண்டும் போதிய பருவமழை இல்லாததால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டு ஏக்கருக்கு 25 ஆயிரம்  செலவு செய்து மிளகாய் பயிரிட்டு உள்ளோம். ஐப்பசி மாதம் மிளகாய் விதை விதைத்து மூன்று முறை களை எடுப்புக்கு பின்பு மிளகாய் செடி வளர்ந்து பூ பூத்து காய் வளா்ந்தது.ஆனால் நீர்ச்சத்து எதுவும் இல்லாததால் ஏற்கனவே செடியில் காய்த்த மிளகாய் செடியிலேயே அழுகிவிடுகிறது.

பருவ மழை பெய்திருந்தால் தற்போது மிளகாய் செடி நல்ல முறையில் வளர்ந்து 3 முறை காய் பிடித்திருக்கும் விவசாயிகளுக்கு வருவாயும் பெருகி இருக்கும்.ஆனால் இதுவரை மழை இல்லாததால் மிளகாய் செடிகள் வளர்ச்சியின்றியும் வெயிலில் கருகியும் வருகிறது.தற்போது மழை பெய்தால் மட்டுமே எஞ்சி இருக்கும் ஒன்றிரண்டு மிளமாய் செடிகளை காப்பாற்ற முடியும் என வேதனையுடன் கூறுகின்றனர் விவசாயிகள்.

மேலும் காப்பீடு தொகையை கடந்த ஆண்டு பல்வேறு பகுதிகளுக்கு கிடைக்கப் பெறவில்லை என்று  இது போன்ற காலங்களில் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் மேலும் தங்கள் பகுதியை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *