ஓசூர் அருகே சுமார் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாம். பொதுமக்கள் அச்சம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாகமங்கலம் பகுதியில் இன்று காலை சுமார் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அங்குள்ள வினை நிலங்கள் வழியாக சென்று முகமிட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக சுமார் 200க்கும் மேற்பட்ட யானைகளானது பல்வேறு குழுக்களாக பிரிந்து கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்து வருகிறது. குறிப்பாக சானமாவு வனப்பகுதி மற்றும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து அவ்வப்பொழுது யானைக் கூட்டங்கள் வெளியேறி பொதுமக்களை அச்சுறுத்தி வருவதுடன் விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு தேவர்பெட்டா பகுதியில் விவசாயி ஒருவரை யானை தாக்கி அவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் வனத்துறையினரும் யானைகளின் கூட்டத்தை கண்காணிப்பதுடன் அவைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாதவாறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 

இருந்த போதிலும் இன்று அதிகாலை திடீரென சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகளானது கூட்டமாக நாகமங்கலம் பகுதியில் சுற்றிய தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.அவைகளை வனத்துறையினர் அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பதிக்கு விரட்டினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *