மொழிப்போர் தியாகிகளின் திரு உருவப்படத்திற்கு திமுகவினர் மலர்கள் தூவி மரியாதை.
தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பை கண்டித்து பல்வேறு காலகட்டங்களில் இன்உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு மொழிப்போர் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் உருவப்படத்திற்கு திமுகவினர் மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.
கும்பகோணம் திமுக அலுவலகத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் திமுக மாணவர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் மொழிப்போர் தியாகிகளின் திருஉருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.