பொங்கல் பரிசு தொகுப்புடன் அடுப்பும்,பானையும் வழங்கிட மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

தமிழக அரசு பொங்கல் தொகுப்புடன், களிமண் அடுப்புடன் பொங்கல் பானையும் சேர்த்து வழங்கிட வழியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர்  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, வெண்ணாம்பள்ளி, குந்தாரப்பள்ளி, இராயக்கோட்டை போன்ற பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான மண்பாண்டத் தொழிலாளிகள் உள்ளனர், இவர்கள் ஏரிகளில் உள்ள களிமண்ணை நம்பியே பிளைப்பு நடத்தி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக ஏரியில் இருந்து மணல் மற்றும் களி மண் எடுக்க முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கைகளில் மண்பானை மற்றும் மண் அடுப்புடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் தமிழகத்தில் மண்பாண்டத் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, 

மணல் இல்லாமல் மண் பாண்டங்கள் செய்ய முடியாது, இதனால் மண்பானைத் தொழிலாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர், தமிழக அரசு மண்பாண்டத் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தினை காத்திட ஏரிகளில் இருந்து களிமண் மற்றும் மணல் எடுக்க உரிய அனுமதி வழங்கவேண்டும், 

பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைத் தாரர்களுக்கு இலவசமாக  வேஸ்டி, சேலை மற்றும்  பச்சரிசி, கருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு தொகுப்புகள் வழங்கி வருகிறது 

அதுபோல வருகின்ற பொங்கல் பண்டிகையின்போது களிமண்ணால் செய்யப்பட்ட மண் பானையுடன் மண் அடுப்புகளும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கி மண்பாண்டத் தொழிலாளிகளின் வாழ்வாரத்தினை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டபாண்டத் தொழிலாளிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *