மதுரையில் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 11 ரவுடிகளை தட்டி தூக்கிய போலீசார்

திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம் சுற்றுவட்டார பகுதியில் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்காக சுற்றுத் திரிந்த 11 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம், திருநகர், பாம்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் டி ஐ ஜி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் மேற்கொண்டனர். அப்போது விளாச்சேரி ஆதி சிவன் கோவில் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த அவர்களை போலீசார் அழைத்து  சோதனை மேற்கொண்டதில் அவர்களிடம் டம்மி துப்பாக்கி, வாள், அரசு தடை செய்யப்பட்ட கஞ்சா 125 கிராம் உள்ளிட்ட பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருநகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி @ காத்தாடி பாண்டி, அருண் பாண்டி@ உருளை அருண் என்பது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதும் தெரிய வந்தது எனவே அவர்களை கைது செய்தனர்.

இதே போல் அவனியாபுரம் காவல் எல்லைக்குட்பட்ட வைக்கம் பெரியார் சாலையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி தெரிந்த வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த சைவம் @சைவ துரை, சரவணன் @ வண்டு சரவணன், வல்லாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் @ புரா கார்த்திக் என்பது தெரிய வந்தது எனவே அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த  மூன்று வாள் பயங்கர ஆயுதத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த கோட்டை தெருவை சேர்ந்த சரத்குமார், பி டி ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் கிழக்குத் தெருவை சேர்ந்த ரவி@டோக் ரவி, தென்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், ராஜா குட்டி கொத்தனார் பகுதியைச் சேர்ந்த நூர்கான் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்து வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளது.

மதுரையில் குற்ற சம்பவங்களுக்கு திட்டமிட்டு பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 11 ரவுடிகளை ஒரே நாளில் கைது சம்பவம் மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *