ஒரே நாளில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான பரிதாபம்

வேப்பூர் அருகே மின்சாரம் தாக்கி தந்தை மகன் பலி அதே போல் மற்றொரு கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி ஒரே நாளில் மூன்று பேர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

 கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் வேப்பூர் ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது இந்த நிலையில் வேப்பூர் அருகே சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராமன் மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகிய இருவரும்  வீட்டில் இருக்கும்பொழுது நேற்று மாலை ராமன் மற்றும் அவரது மகன் மணிகண்டன் இரண்டு பேர் மீது மின்சாரம் பாய்ந்து  பரிதாபமாக சம்பவ இடத்திலேயே தந்தை மகன் உயிரிழந்தனர் 

பின்னர் இதனை அறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமன் மற்றும் மணிகண்டன் உடலை  மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் சிறுபாக்கம் அடுத்த சித்தேரி கிராமத்தில் விவசாயி பெரியசாமி என்பவர் வீட்டின் முன்பு இருந்த மின் கம்பி அருந்து விழுந்ததில் பெரியசாமி மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார் 

அவரது உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் வேப்பூர் அருகே  ஒரே நாளில் சிறுபாக்கம், சித்தேரி பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தை மகன் உட்பட மூன்று பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *