50.6 லட்ச ரூபாயை தமிழக அரசின் நிவாரண நிதிக்காக வழங்கிய ட்ரெண்டிங் பிச்சைக்காரர்

யாசகம் எடுத்ததில் கிடைத்த ரூ 10,000த்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய பிச்சைக்காரர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் கால் போன போக்கிலே பல ஊர்களுக்கு சென்று யாசகம் ( பிச்சை ) பெறுவார். அதன் மூலம் கிடைக்கக் கூடிய பணத்தை தனது செலவுக்கு போக மீதியுள்ள பணத்தை  தமிழக அரசின் பொது நிவாரண நிதி, இலங்கை தமிழர் நிவாரண நிதி, கொரோனா நிவாரண நிதி என பல்வேறு அரசு சார்ந்த நிவாரண நிதிகளுக்கு 2010 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறார். 

இவர் கடந்த சில தினங்களாக மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து யாசகமாக  ரூ 10 ஆயிரம் பெற்றார். இதனையடுத்து இன்று 10.10.22 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பூல் பாண்டி வருகை தந்தார். 

பின்னர் தான் யாசகமாக பெற்ற ரூ 10,000த்தை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் வழங்கினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மற்றும் திண்டுக்கலை சுற்றியுள்ள கோவில்களில்  யாசகம் எடுத்து அதன் மூலம் கிடைத்த ரூ10 ஆயிரத்தை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு நிவாரண நிதிக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் வழங்கினார். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூபாய் 50 லட்சத்து 60 ஆயிரத்தை தமிழக அரசின் பல்வேறு நிவாரண நிதிகளுக்காக வழங்கி உள்ளதாக  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *