அரசு கட்டிடங்களின் ஆயுட்காலங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களின் தரம் மற்றும் ஆயுட்காலங்களை ஆய்வு செய்ய குழு அமைத்து நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு
குறிப்பாக மாவட்ட ஆட்சியர் கட்டிடங்கள்,அரசு மருத்துவமனை கட்டிடங்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் – மனு தாரர் கோரிக்கை.
தமிழக அரசு மனுவினை பரிசீலனை செய்து எட்டு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. ராஜு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்
அதில்” தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் கட்டிடங்கள் மற்றும் அரசு மருத்துவமனை கட்டிடங்களின் தரம் மற்றும் கட்டிடத்தின் ஆயுட்காலம் ஆகியவற்றினை ஆய்வு செய்யவும் மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு அரசு கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது இதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது
எனவே அரசு கட்டிடங்களை ஆய்வு செய்வதற்காக குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது..
அப்போது நீதிபதிகள் மனுதாரரின் மனுவினை தமிழக அரசு பரிசீலினை செய்து சட்டத்திற்கு உட்பட்டு எட்டு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்