நல்லாறு திட்டத்தை அமல்படுத்த தேங்காய் மாலையுடன் ட்ரெண்டிங் போராட்டம்! 

ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனே அமல்படுத்த கோரிக்கை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் தேங்காய் மாலையுடன் கோரிக்கை முழங்கி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் 

ஆனைமலை நல்லாறு திட்ட பணிகளை உடனே துவங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகளின் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. கோயமுத்தூர் மாவட்ட விவசாயிகள் ஆயிரம் பேர் திரண்டு போராட்டம் நடத்தினர். 

அப்போது கிடப்பில் உள்ள ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகளை தமிழக அரசு உடனே துவங்க வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன பகுதி கரையோர விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் கிணற்றில் உள்ள மின் இணைப்பை துண்டிக்க கூடாது. பரம்பிக்குளம் பாசன திட்டத்திற்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு அநீதி இழைக்கக் கூடாது. 

தென்னைக்கு தான் சோதனை விவசாயிக்கு தான் வேதனை தேங்காய், மட்டை, காலி தொட்டிக்கும் விவசாயத்துக்கும் விலை இல்லை. தண்ணீரை தவறாக பயன்படுத்தும் நபர்களை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மழைக்காலங்களில் நீர் திறப்பு பாசன கால்வாயை தவிர்த்து மற்ற பாசன கால்வாயில் உள்ள குளம், குட்டையை நீர் நிறப்ப ஆவணம் செய்ய வேண்டும். 

தற்போது பிஏபி பாசன நிலங்களில் பல நிலங்கள் தொழிற்சாலைகள் யாவும் காற்றாலைகளாகவும் மாறி உள்ளது. இந்த நிலங்களை பாசன திட்டத்தில் இருந்து நீக்கி மூன்று மண்டலமாக மாற்ற வேண்டும். பாசன விவசாயிகள் தென்னை சார்பில் தொழில் புரியும் விவசாயிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் தமிழக முதல்வர் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க  கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் விவசாய பெருமக்கள் தெரிவித்திருக்கின்றனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோயமுத்தூர் மாவட்ட குழுவிலிருந்து சு பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் துணை தலைவர் பெரியசாமி, சூலூர் எம்.எல்.ஏ. கந்தசாமி, பிஏபி கரையோர விவசாயிகள், கோவை, திருப்பூர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், விவசாய கூட்டமைப்புகள், கொங்கு மண்டலம் மேற்கு பகுதி விவசாயிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *