பெரியாரின் தத்துவங்கள்  தான் என்னை வழிநடத்துகிறது –  சித்தராமையா

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய சித்தராமையா, தான் பெரியார் தத்துவங்களையும் அறிவையும் பின்பற்ற கூடியவன் என்றார். 

பெரியார் ஒரு மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர், இங்கு உள்ள அனைத்து திராவிட கட்சிகளும் சந்திப்பதற்காக நான் வருகை தந்துள்ளேன் என கூறினார். குறிப்பாக தற்போது நான் வருகை தந்துள்ள பெரியார் திடலில் உள்ள தலைவர் கி.வீரமணியை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். சமூக நீதி சட்ட திருத்தம் உள்ளிட்டவை திராவிட ஆட்சி காலத்திலேயே கொண்டு வரப்பட்டது.

சட்டமேதை அம்பேத்கரை பொறுத்த வரையில் சமூகத்தில் அனைவருக்கும் சம உரிமை என்கிற அவர் கொண்டு வந்த சட்டத்தின் முயற்சியை இன்றளவும் நாம் அதை நடைமுறை படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

பெரியாரின் தத்துவங்களையும், அறிவையும் பின்பற்ற கூடியவன் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளது நமக்கு கிடைத்த வெற்றி என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *