பளபளக்குது புது நோட்டு..!! மருந்து ஆய்வாளர் வீட்டில் சிக்கிய பல கோடி ரூபாய் கருப்பு பணம்..!!

பீகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் மருந்து ஆய்வாளர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ஜிதேந்திர குமார் என்பவர்  மருந்து ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.  அவர் மீது தொடர்ந்து லஞ்ச புகார்கள் குவிந்து வந்தன.   சந்தேகத்தின் பெயரில் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை செய்தனர்.

இதில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரூபாய் பணம், 1 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், 5 சொகுசு வாகனங்கள், உள்ளிட்ட அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜிதேந்திர குமார் கடந்த 2011-ம் ஆண்டு மருந்து ஆய்வாளர் பணியில் சேர்ந்தார். தற்போது பாட்னாவில் அவர் ஒரு பார்மசி கல்லூரியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.கட்டில் முழுவதும் அடுக்கி வைக்கும் அளவிற்கு கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது கண்டு  பாட்னாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *