சிறுமியை பாலியல் வண்புணர்ச்சி செய்தவருக்கு ஆயுள் தண்டணை
கடந்த 2018 ஆம் ஆண்டு மரக்காணம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் வண்புணர்ச்சி செய்த வழக்கில் ஒருவர்க்கு ஆயுள் தண்டனை -அரசு 6 லட்சம் இழப்பிடு வழங்க போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த 20.10.2018 அன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மண்டவாய்புதுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆட்சிக்காடு பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு வந்தபோது 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கு. விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹெர்மீஸ் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிந்து இந்து தீர்ப்பு அளித்த நீதிபதி , வழக்கில் கைது செய்யப்பட்ட ஆட்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜகிளி வயது 42 என்பவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார்
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ 6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்