அறுந்து கிடந்த மின் வயரை மிதித்து பெண் பரிதாப பலி…!

உசிலம்பட்டி அருகே அறுந்து கிடந்த மின் வயரை மிதித்து விவசாய பணிக்கு சென்ற பெண் உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தைச் சேர்ந்தவர்கள் தங்கம் – ராசம்மாள் தம்பதி., 

கணவரும் மனைவியும் தங்களது தோட்டத்தில் விவசாய பணி செய்து வரும் சூழலில் இன்று வழக்கம் போல இரவு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மனைவி ராசம்மாள் தோட்டத்திற்கு சென்ற போது தோட்டத்து பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அறுந்து கிடந்த மின் வயரை ராசம்மாள் எதிர்பாராதவிதமாக மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.,

தகவலறிந்து விரைந்து வந்த எழுமலை காவல் நிலைய போலிசார் நிகழ்விடத்திற்கு சென்று உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *