சஞ்சீவி மலையில் தீ விபத்து; வீடுகளுக்கு பரவும் என மக்கள் அச்சம்..!

Fire

இராஜபாளையம் சஞ்சீவி மலையில் திடீரென தீ விபத்து பலத்த காற்று வீசுவதால் அருகே ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளதால் பொதுமக்கள் அச்சம்….வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்….

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தின் கிழக்கு பகுதியில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள 18வது வார்டு வடக்கு மலையடிப்பட்டி. குலாலர் தெரு . பிள்ளையார் கோவில் தெரு காமராஜபுரம் எம்ஜிஆர் நகர் 1. எம்ஜிஆர் நகர் .2 உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மலையின் உச்சியில்   திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு பகுதியில் பற்றிய நெருப்பு காற்றின் வேகம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு வேகமாக பரவியது. மலையின் அடிவரத்தில் வந்து விடும் என அப்பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வசிக்கும் பொதுமக்கள் அச்சம் நிலவியது. இதனால் மலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நெருப்பு பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. தகவல் அறிந்த வனத்துறையினர் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் காற்றின் வேகத்தில் நெருப்பு கொளுந்து விட்டு எரிவதால், தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.மலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து ராஜபாளையம் நகர மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தீ இயற்கையாக பற்றி எரிந்ததா, சமூக விரோதிகள் யாராவது இந்த தீ விபத்தில் தொடர்பில் இருக்கிறார்களா, என்ற கோணத்தில் வனத்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *