தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர்…!

தமிழ்நாட்டில் ஈரோடு கோவை உள்ளிட்ட 25 இடங்களில் உழவர் சந்தைகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டிருப்பதற்கு விவசாயிகள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.. 

கலைஞர் ஆட்சியில் உழவர்களின் வாழ்வு மேம்படுவதற்காகவும் பயனாளிகளுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் மற்றும் விளை பொருட்கள் கிடைப்பதற்கு ஏதுவாகவும் உழவர் சந்தை திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது.

தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு மீண்டும் உழவர் சந்தைகள் திட்டம் புத்துணர்வு பெற்றுள்ளது.  இதன் ஒரு கட்டமாக 25 உழவர் சந்தைகளை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளனர். நகர் பகுதிகளை போலவே பேரூராட்சி பகுதிகளிலும் சாத்தியமுள்ள இடங்களில் உழவர் சந்தைகளை விரிவு படுத்த வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *