ஓடும் பேருந்தின் சன்னல் வழியாக குதித்த வாலிபர் பரிதாப பலி…!
தேவகோட்டை அருகே மதுரை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த வாலிபர் பலி
இராமநாதபுர மாவட்டம் தொண்டியிலிருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் பேருந்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கற்களத்தூர் ஊராட்சி அலுவலகம் அருகே வந்த போது திடீரென பேருந்தில் பயணம் செயத ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முருகவேல் (35) என்ற வாலிபர் ஜன்னல் வழியாக வெளியே குதித்ததில் படுகாயமடைந்து
சம்பவ இடத்திலேயே பலி தேவகோட்டை தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முருகவேல் ஜன்னல் வழியாக ஏன் ? குதித்தார் என நடத்துனர் மற்றும் குடும்பத்தாரிடம் விசாரனை செய்து வருகின்றனர்.