மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு: தொடக்கக் கல்வித் துறை உத்தரவு!!
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும், மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த சூழலில் தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் செயல்படும் 1 முதல் 5 ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன் படி, ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கொரோனோ காலத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக மாணவர்களில்ன் கற்றல் திறன் என்பது குறைவாகவே காணப்பட்டது.
இதற்கிடையில் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து கொள்ளும் வகையில் வருகின்ற 19ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை கூறியுள்ளது.