பள்ளி வளாகத்தில் குழந்தை சடலம்… கடலூரில் பரபரப்பு!!
கடலூர் மாவட்டம், புவனகிரியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். . இந்த நிலையில் பள்ளியில் கழிவறை அருகில் பிறந்து சில மணி நேரங்களே ஆன் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் இறந்து கிடப்பதை கண்ட மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் உடனடியாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் புவனகிரி காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் விரைந்து வந்த ஆய்வாளர் சரஸ்வதி, உதவி ஆய்வாளர் சந்தோஷ் கழிவறை இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 11-ம் மாணவியரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் ஊரை சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் தான் மாணவியின் கர்பத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார். அதோடு கர்ப்பம் ஆகிய நிலையில் மாணவி கழிவறையிலேயே குழந்தை பெற்றெடுத்து புதரில் வீசியதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.