இரவில் வீட்டை நோட்டமிட்ட சிறுத்தை.!- பீதியடைந்த மக்கள்!
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாகவே வனவிலங்குகளின் தொந்தரவு என்பது தொடர்ந்து அதிரித்து வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தப்போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இரவில் கேட்டைத் தாண்டி வீட்டை நோட்டமிட்ட சிறுத்தையால் அப்பகுதியினர் பீதியில் உறைந்துள்ளனர். யாரப்பா அது கும்மிருட்டில் லைட் எரிய விட்டுக் கொண்டு வருவது என்று தான் முதலில் தோன்றியிருந்தாக தெரிவித்தனர்.
ஆனால் சிறுத்தையின் கண்களில் இருந்து வரும் வரும் நிகழ்வு போன்று அமைந்து அமைந்து இருந்ததாகவும், பம்மிக்கொண்டே வீட்டின் கதவைத் தாண்டிக் குதித்து உள்ளே வந்து ஏதும் இரை சிக்குகிறதா என்று சிறுத்தை நோட்டமிட்ட தெரிகிறது.
பின்னர் எதுவும் கிடைக்கவில்லை என்றவுடன் ஒரே தாவாக கேட்டைத் தாண்டி குதித்து ஓடும் வீடியோ காட்சி தான் தற்போது குன்னூர் மக்களை அச்சமடையச் செய்துள்ளது. இத்தகை சம்பவமானது வனத்துறையினர் கண்காணிப்பில் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.