பட்டப்பகலில் பயங்கரம்..!! சென்னையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்..!!

வடசென்னை கிராஸ்ரோடூ பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் மாணவி வழக்கம் போல் இன்று அந்த மாணவி பள்ளி செல்வதற்ககாக ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்கெனவே 25 வயது மதிக்கதக்க இரு நபர்கள் பயணம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது டோல்கேட்டில் இருந்து தங்கசாலை செல்வதற்காக பயணித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவியை, கைகுட்டை கொண்டு வாயில் வைத்து மூடி, மாணவியை கடத்த முயன்றுள்ளனர். இதனை அறிந்த அந்த மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதில் மூக்கு, தாடை போன்ற பகுதிகளில் சிறு காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக ஆட்டோவை நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர், கீழே விழுந்து கிடந்த மாணவியை தூக்கிய சமயத்தில் ஆட்டோவில் இருந்த அந்த மர்ம நபர்கள் தப்பியோடியதாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் ஓடும் ஆட்டோவில் இருந்து பள்ளி மாணவி கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின்பேரில் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த காயமடைந்த மாணவிக்கு முதலுதவி அளிக்கும் வகையில், அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் தப்பி ஓடிய நபரை அங்க அடையாளங்களுடன் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், ஆட்டோ ஓட்டுனரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *