அரசு பள்ளி மாடியிலிருந்து குதித்த மாணவி.. சேலத்தில் அதிர்ச்சி!!
சேலத்தில் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவி பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் மாணவி 3வது மாடியில் இருந்து குதித்து உயிர் இழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்துள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் மாணவிக்கு முதலுதவி சிகிச்சை குறித்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மேச்சேரி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுமி சேலம் அமரப்பகுதியை சேர்ந்தவர் என்பதும் குடும்ப பிரச்சணை விவகாரத்தில் பள்ளி கட்டத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், சேலம் அரசு மருத்துவமனைக்கு அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் வந்து உடல்நலம் குறித்து மருத்துவரிடம் விசாரணை நடத்தினார். தற்போது கால்முறிவு மற்றும் தாடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.