மெரினா கடற்கரையில் தடையை மீறி குளிப்பதை தடுக்க நடவடிக்கை!!

மெரினா கடற்கரையில் தடையை மீறி குளிப்பதை தடுக்க ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் கடற்கரையில் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து கடற்கரைக்கு குளிக்க செல்பவர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். அதனடிப்படையில் 2 ஆண்டுகளில் 34 நபர்களுக்கு மேலாக கடலில் குளிக்க சென்று மாயமாகியுள்ளனர்.

கடந்த வாரங்களில் மட்டும் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இதனிடையே கடற்கரையில் கடல் அலையில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் ட்ரோன்கள் மூலம் காலை, மாலை வேளைகளில் இன்று முதல் கண்காணிப்பு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மெரினா கடற்கரை மட்டுமல்லாமல் பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் இதுபோன்று ட்ரோன் பணிகள் கண்காணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பொது மக்களின் நலன் கருதியும் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *