ஆன்லைன் ஆர்டரில் வந்த பழைய பிரியாணி.. அதிர்ந்த வாடிக்கையாளர்!!
சென்னை தனியார் உணவகத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு கெட்டுப்போன பிரியாணியும், லாலிபாப் வழங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன் ஆன்லைனில் சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் லாலிபாப் ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் உணவு டெலிவிரி செய்யப்பட்ட நிலையில் அதனை திறந்து பார்க்கும்போது உணவில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் லாலிபாப் இரண்டுமே கேட்டு போனதை அறிந்த அவர் சம்பந்தப்பட்ட உணவகத்தை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது கெட்டுப்போன உணவிற்கு பதிலாக வேறு உணவை பெற்றுக் கொள்ளுங்கள் என உரிமையாளர் கூறியதால் கோபம் அடைந்த அவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு போனில் புகார் அளித்தார்.
இருப்பினும் அவர் அருகில் இருக்குல் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு கெட்டுப்போன பிரியாணி மற்றும் லாலிபாப் வழங்கப்பட்டது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.