கோவில், தர்கா, சர்ச் என மாநாட்டு அழைப்பிதழை வைத்து வழிபாடு செய்த அதிமுக செல்லூர் ராஜு…!
மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டு அழைப்பிதழ்லை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மீனாட்சியம்மன் கோவிலில் வைத்து வழிபாடு
இதனை தொடர்ந்து கோரிப்பாளையம் தர்கா, சென் மேரீஸ் சர்ச் ஆகிய வழிபாட்டு தளங்களிலும் அழைப்பிதழை வைத்து வழிபாடு நடத்தினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தரிசனத்தை முடித்துக் கொண்டு செய்தியாளிடம் பேசி செல்லூர் ராஜு,
அண்ணாமலை குறித்த கேள்விக்கு, நான் ஒரு வாசகம் சொன்னால் திருவாசகம் மாதிரி சொல்கிறேன்.அண்ணாமலை கருத்து குறித்து எனக்கு எந்தவொரு கவலையுமில்லை குதிரைக்கு கண்ணாடி போட்டது போல நாங்கள் மாநாட்டு பணிகளில் ஈடுபட்டு உள்ளோம்.கண்ணாடி போட்டிருப்பதால் எந்த பக்கமும் திரும்பாமல் குதிரை செல்லும்.( குதிரைக்கு கடிவாளம் என்பதற்கு பதிலாக கண்ணாடி என பேசினார்)
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 10 ஆம் தேதி ரிலீஸ் அதிமுக மாநாட்டின் மெயின் பிக்சர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது சித்திரை திருவிழாபோல அதிமுக மாநாடு நடத்தப்படும்