ஆளுநரும் அமலாக்கத்துறையும் வரும் தேர்தலில் வெற்றியை தருவார்கள்! கார்த்தி சிதம்பரம் அதிரடி

ஆளுநர் மற்றும் அமலாக்க துறையின் செயல்பாடு வரும் தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும். கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் பேட்டி.

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், ஆயுத கடத்தல் போதைப் மருந்து விற்பனை, தீவிரவாதம் மூலம், ஆள்கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களின் மூலம் பணம் பரிவர்த்தனை நடைபெற்றால் அதனை கண்டறியத் தான்  அமலாக்கத்துறை உருவாக்கப்பட்டதாக தெரிவித்த கார்த்தி சிதம்பரம், 

அதனை விடுத்து அமலாக்கத்துறையை  பாஜக அரசு எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது என்று குற்றம் சாட்டினார். உண்மையான வழக்கு விசாரணை என்றால் அமலாக்கத்துறை சம்மன் கொடுத்து விசாரிக்க வேண்டும், ரெய்டு என்பது முறையானது அல்ல என்று கூறியவர், நிச்சயம் இந்த சட்டவிரோத செயல் வரும் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மிகவும் சாதகமாக அமையும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *