அண்ணாமலையாவது, உண்ணாமலையாவது..! கடுப்பான செல்லூர் ராஜு…!
தமிழகத்தில் அதிமுக தலைமையிலேயே கூட்டணி அமையும், அண்ணாமலையாவது, உண்ணாமலையாவது செல்லூர் ராஜு காட்டம், முதல்வ ஸ்டாலின் கருத்துக்கு வரவேற்பு மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே துவரிமான் கிராமத்தில் நடைபெற்ற சமுதாயக்கூட அடிக்கல்நாட்டு விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முதல்வர் ஸ்டாலின் மாநிலத்தில் எந்த கட்சி வழுவாக உள்ளதோ அதன் தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று கூறியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அதனை வரவேற்கிறேன்,
அவர் உண்மையைத் தான் கூறியுள்ளார், தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று கூறியவர் அண்ணாமலை பாஜக தலைமையில் தான் கூட்டணி என்கிராறே என்ற கேள்விக்கு அண்ணாமலையாவது உண்ணாமலையாவது என காட்டமாக தெரிவித்தவர் கூட்டணி குறித்து அவரது கட்சி தலைமையே முடிவெடுக்கும் அவர் அல்ல என்றார்.
மேலும் ஆளுநர் ரவி விவகாரம் குறித்த கேள்விக்கு நாங்கள் அவரை வாழ்த்தவும் இல்லை வசைபாடவும் இல்லை என்றார்.மேலும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக வரவேண்டும் என அமித்ஷா கூறிவிட்டு மோடிதான் பிரதமர் என கூறியுள்ளார் என்ற கேள்விக்கு தங்கள் கட்சியை வளர்க்க எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்கா சொல்வார்கள், அப்படி தமிழன் பிரதமர் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமியாக கூட இருக்கலாம் என்றார். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மட்டுமே போட்டி என்றார் ..