வன்னியர்களுக்கு 10.5 % உள் இட ஒதுக்கீடு வழங்க… பதாகையுடன் பா.ம.க கவுன்சிலர்கள் போராட்டம்

வன்னியர்களுக்கு 10.5 % உள் இட ஒதுக்கீடு வழங்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற கோரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்திற்கு பதாகையுடன் வந்த பா.ம.க கவுன்சிலர். இட ஒதுக்கீடு சம்பந்தமாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றததால் வெளிநடப்பு.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் தலைவர் திருமதி.சாரதா (அதிமுக) தலைமையில் இன்று ( 5-5-2023 )நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்க வந்த 8 வது வார்டு (பாமக ) உறுப்பினர் திரு வடிவேலன் என்பவர் வன்னியர்களுக்கு 10.5 % உள் இட ஒதுக்கீடு வழங்ககோரி கையில் பதாகையுடன் வந்தார். பின்னர் இது தொடர்பாக கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஆனால் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றாததால் அவர் வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *