இருந்த ஒரே நம்பிக்கையும் போயிருச்சே !அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும்-ஹைகோர்ட் தீர்ப்பு

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் வழக்கு, பொதுச் செயலாளர் தேர்வு வழக்கு உள்ளிட்டவற்றை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பளித்தார்.

அதில் அதிமுக பொதுக் குழு செல்லும் என்றும் அதன் தீர்மானங்கள் செல்லும் என்றும் தீர்ப்பளித்துள்ளார். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க விதித்திருந்த தடையும் நீங்கியது. அதிமுக தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கியதும் செல்லும் என்றாகிவிட்டது. எனவே இனி ஓபிஎஸ்ஸின் அரசியல் பயணம் அஸ்தமனமாகிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *