அதிமுக-பாஜக போல் இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. மணமக்களை வாழ்த்திய உதயநிதி..!

நாமக்கல் மாவட்டம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேந்தமங்கலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டியை துவக்கி வைத்துவிட்டு சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பொன்னுசாமி அவர்கள் இல்ல சுயமரியாதை திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசும்போது இவ்வாறு கூறினார்…

நாமக்கல் அடுத்த வெட்டுக்காட்டு பகுதியில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி இல்ல திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  மணமக்களுக்கு சுயமரியாதை திருமணம் நடத்தி வைத்தார்.

இந்த நிலையில் நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாமக்கல் அடுத்த வெட்டுக்காடு பகுதியில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி இல்ல சுயமரியாதை திருமண விழா நடைபெற்றது.. 

சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி இல்ல திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கலந்து கொண்டு நவஜீவன்-வித்யா மணமக்களுக்கு மாலை எடுத்து கொடுத்து  திருமணம் நடத்தி வைத்தார் அப்பொழுது பேசிய அவர் மணமக்கள் அதிமுக பிஜேபி போல் இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூறி மணமக்களை வாழ்த்தினார் உதயநிதி ஸ்டாலின்.

உடன் மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *