பயங்கரமான பொய்யை படுபயங்கரமா சொல்வது தான் அண்ணாமலை… அமைச்சர் மஸ்தான் கிண்டல்…!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்.
திண்டிவனம் பேருந்து நிலையம் 18 மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும், பாஜக தலைவர் அண்ணாமலை சிறுபிள்ளை தனமாக பேசி வருகிறார். இந்திய நாட்டில் கோபாலபுரத்தில் இருந்து இந்தியா அரசியலை வழிநடத்தியவர் கலைஞர். இவையெல்லாம் அண்ணாமலை போன்ற சிறுபிள்ளைக்கு தெரியாது.
ஆட்சி பொறுப்பேற்ற பின் நடந்த இடைத்தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தன்னை பற்றி வாக்காளர் மத்தியில் பேசும்போது கடமை கண்ணியம் கட்டுப்பாடு என கூறி பிரச்சாரம் செய்தார். ஜனநாயக ரீதியாக வெற்றி தோல்வியை ஏற்றுகொள்ள வேண்டும்
இதனை ஏற்றுகொள்ள முடியாமல் சிறுபிள்ளை அண்ணாமலை பேச்சு அரைவேக்காடு பேச்சாக இருக்கிறது. கோஸ் விலை பற்றி உரிய காரணம் சொல்லலாம், சாக்கு போக்கு சொல்வது அண்ணாமலை ஸ்பெஷல் எனவும் பொய்யை பயங்கரமா சொல்வது! பயங்கரமா பொய்யை சொல்வது தான் அண்ணாமலை தனித்தன்மை என அமைச்சர் மஸ்தான் விமர்சனம் செய்தார்.