கலைஞர் குரலில் பேசி கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு கவனத்தை ஈர்த்த நபர்…! 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிபி அக்ரஹாரம் பகுதியில் திமுக நிர்வாகிகள் வாக்காளர்களின் கால்களில் விழுந்தும் தேநீர் கடையில் வடை சுட்டும் விண்ணதிர தமிழ்நாடு அரசின் திட்டங்களை முழக்கங்களாக எடுத்துரைத்தும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குரலில் பேசியும் கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ம் தேதி நடைபெற உள்ளது.  இதனால் இத்தொகுதியில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கட்சி நிர்வாகிகளும் தீவிர பிரச்சாரத்தில் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக பிபி அக்ரஹாரம் பகுதியில் திமுக கட்சி நிர்வாகிகள் கடலூர் மாநகர் திமுக செயலாளர் ராஜா தலைமையில் வாக்காளர்களின் கால்களில் விழுந்தும் விண்ணதிர தமிழ்நாடு அரசின் திட்டங்களை முழக்கங்களாக எடுத்துரைத்தும் அப்பகுதியில் உள்ள தேனீர் கடையில் கை சின்னத்தில் வாக்கு கேட்டுக் கொண்டே வடை சுட்டும் அதேபோல் திமுக நிர்வாகி ஒருவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குரலில் கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வாக்காளர்களை கவர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *