மோடிக்கு காவடி தூக்குபவர்களை அடக்கி வைக்க வேண்டும்… கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன். அதிமுக பாஜக கூட்டணிக்கு சாவு மணி அடிக்கும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் இருக்கும். கூட்டணியில் இல்லை என பொய் சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். மத்தியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர். மக்கள் ஏமாற மாட்டார்கள்.
2024 இல் மோடி அரசுக்கு முடிவு கட்டுவதற்கான தொடக்கமாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும். இரட்டை இலை சின்னமே அவர்களுக்கு கிடைத்தாலும் பெரும் தோல்வியை சந்திப்பார்கள். பல தேர்தல்களில் இரட்டை இலை படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் மோடிக்கு காவடி தூக்குபவர்களை அடக்கி வைக்க வேண்டும். இதற்கான ஒரு களப்போராளியாக ஈவிகேஎஸ் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார்..