பெண்கள், விவசாயிகள் மகிழும் வகையில் ஆட்சி… மு.க.ஸ்டாலினை பாராட்டும் வைகோ
மதிமுக பொதுசெயலாளர் வை.கோ பேச்சு.. தமிழ்நாட்டில் நடைபெறுகிற ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டும் ஆட்சியாக இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் புதுபுது திட்டங்களை தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து கொண்டிருக்கின்றார். எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை ஸ்டாலின் அறிவித்துக் கொண்டிருக்கின்றார். புதுமையான புத்துணர்ச்சி அளிக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறார். பெண்கள் விவசாயிகள் மகிழும் வகையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார்.
தமிழர்களை, விவசாயிகளை இந்தியர்களை வஞ்சிக்கும் வகையில் ஒரு ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்க வேண்டும். அதற்கேற்ப இந்த தொகுதி மக்கள் அனைவரும் கைச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்..