திமுக வேட்பாளர் என கருதியே தேர்தல் பணியாற்றி வருகிறோம்… அமைச்சர் எ.வ.வேலு
தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்வில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு.. இடைத்தேர்தலில் இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டாலும், திமுக வேட்பாளர் களமிறங்கியதாக கருதியே தேர்தல் பணியாற்றி வருகிறோம். இடைத்தேர்தல் அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் எடைபோடும் தேர்தலாக இருக்கும். தந்தை பெரியாரின் குடும்பத்தை சார்ந்தவர் என்ற முறையில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், திமுக.வின் சொந்தக்காரர்.
திருமகன் நினைத்த திட்டங்களையும், இலக்கையும் அவரது தந்தையை வெற்றிபெற செய்து நிறைவேற்ற வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மக்கள் எண்ணாத, தேர்தலில் சொல்லாத திட்டங்களையும் முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார்.
ஆட்சியை எடை போடும் தேர்தலாக இது இருக்கிறது. திமுக அரசு செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ்.இளங்கோவனை வெற்றி பெற செய்வோம்..