சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு தடை… சட்டப்படி எதிர்கொள்ள தயார் -திருமாவளவன்
அக்டோபர் 2 ம் தேதி காந்தி பிறந்தநாளில் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் 50 இடங்களில் அணி வகுப்பு நடத்தப் போவதாக அறிவித்தது. நீதிமன்றம் காவல்துறைக்கு வழிக்காட்டுதல் தந்துள்ளது. நேற்று 28ஆம் தேதி அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.பி திருமாவளவன்.
இன்று தமிழக அரசு ஆர் எஸ் எஸ் அணி வகுப்புக்கு, விசிக, இடதுசாரிகள் முன்மொழிந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு தடை விதித்திருப்பதாக தகவல் கூறுகின்றன. சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு ஏராளமான அரசியல் இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள், சமூக நீதி இயக்கங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் இந்தத் தடை எமக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
சட்டப்படி அனுகி அனுமதி பெற்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியை நடத்துவோம். காவல்துறையிடம் இதுகுறித்து மனு கொடுக்க உள்ளோம். அர்.எஸ்.எஸ் நடத்தும் 50 இடங்களில், நாங்களும் மனித சங்கிலி நடத்தினால் சட்ட ஒழுங்கு ஏற்படும் என்ற அச்சம் அரசுக்கு இயல்பாக ஏற்படதான் செய்யும்.
ஆர்.எஸ்.எஸ் நடத்தும் 50 இடங்களில் அனுமதி மறுத்தால் சரி. நாங்கள் அறிவித்த தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை ஒட்டு மொத்தமாக தடை விதித்திருப்பது சற்று ஏமாற்றத்தை தருகிறது. 50 இடங்கள் போக நாங்கள் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என காவல்துறை குறிப்பாக தலைமை இயக்குனரை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் என்பது சமூக அமைதியை நிலைநாட்டக் கூடிய அடையாள போராட்டம். ஆர்எஸ்எஸ் நடத்த கூடிய 50 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மனித சங்கிலி நடத்த அனுமதிக்க வேண்டும்.
500 இடங்களில் மனித சங்கிலி நடத்த அனுமதி கூறியிருந்தோம். தமிழகத்தில் உள்ள அனைத்து மையங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்.க்கு வரலாறு உண்டு பேரணி என்கின்ற முறையில் அடியெடுத்து வைக்கிறார்கள் பின்னர் முஸ்லிம் வெறுப்பு, கிறிஸ்துவ வெறுப்பு விதைக்கிறார்கள். மக்களிடம் வெறுப்பை விதைக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சமூக நீதி, இட ஒதுக்கீடு, அடிப்படை வசதிகளுக்காக பேரணி நடத்தவில்லை, மக்களுக்கு குடிநீர் வேண்டும், வேலை வாய்ப்பு வேண்டும், அடிப்படை கோரிக்கையை வைக்காமல் மத உணர்வை வளர்க்கும் வகையில் இந்தியா முழுவதும் கலவரத்தை திட்டமிட்டு நடத்தவே செயல் திட்டங்களில் ஒன்று.
தற்போது தமிழ்நாட்டை குறி வைத்துள்ளனர். மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக பாஜக பேரணி நடத்தினால் நாம் தலையிட போவதில்லை. பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஒன்று தான் என்றாலும் கூட பாஜக அரசியல் இயக்கம்.
ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு வகுப்புவாத இயக்கம், முஸ்லிம், கிறிஸ்துவ வெறுப்பு இயக்கம் அந்த இயக்கம் கிராமங்கள் தோறும் ஜெய் ஸ்ரீ ராம் என கிராமங்கள் தோறும் சொல்ல போவது என்றால் தமிழ்நாடு நாசமாக விடும் என்ற கவலை இருக்கிறது அதற்கு அனுமதி தரக்கூடாது என்பது என்னுடைய வேண்டுகோள்.
அந்த அடிப்படையில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மனித சங்கிலி போராட்டத்தை அறிவித்தோம். 50 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்த அனுமதி அளிக்க இன்று கோரிக்கை வைப்போம்.