உத்தரவு பொருந்தாது! ஓபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சண்முகம் சார்பில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்கள் கொண்டுவரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் அவைத்தலைவர் நியமிக்கப்பட்டார்.

இதனால் ஓபிஎஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றத்தில் சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் அமர்வானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சண்முகம் தரப்பில் பேசிய வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அவைத்தலைவர் நியமிக்கப்பட்டதாகவும் ஒற்றை தலைமை வேண்டும் என்று கையெழுத்து போடப்பட்டதாகவும் வாதிட்டார்.

அதேபோல் மீண்டும் பொதுக்குழு கூட்டம் கூட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று சண்முகம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதேபோல் இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவைத்தலைவர் இல்லாமல் எப்படி பொதுக்குழு கூட்டம் முடியும் என்றும் சண்முகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

இந்நிலையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை இருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு பொதுக்குழு கூட்டம் மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும், 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்கள் கொண்டுவரக்கூடாது என்று உத்தரவு ஜூன் 23-ம் தேதிக்கு மட்டுமே பொருந்தும் என்றும் வருகின்ற 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு இந்த உத்தரவு செல்லாது என கூறினர்.

இதனை தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதால் இபிஎஸ், ஓபிஎஸ், தமிழ்மகன் உசேன், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதிமுக-வின் பொதுக்குழு நடத்துவதற்கு தடைவிதிக்க கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டும் என்று நீதிபதிகள் கூறி வழக்கு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *