நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து..!! தெலுங்கானா பாஜக எம்எல்ஏ கைது..!

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக எம் எல் ஏ ராஜா சிங் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் கோஷாமால் தொகுதியின் எம் எல் ஏ ராஜா சிங், நபிகள் நாயகம் பற்றி அவதூறான கருத்தை தெரிவித்ததுடன், நபிகள் பற்றி தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய சர்ச்சையான நூபுர் சர்மாவின் கருத்தை மீண்டும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அவர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது அடுத்து, இஸ்லாமியர்கள் பலர் நேற்று ராஜா சிங்குக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து, நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக வழக்கு பதியப்பட்டு இன்று காலை எம் எல் ஏ ராஜா சிங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நபிகள் நாயகம் குறித்து அவதூறு... பாஜகவின் நுபுர் ஷர்மாவை விசாரணைக்கு அழைக்க  மும்பை போலீஸ் முடிவு | Mumbai police to summon BJP spokes person Nupur  sharma on comment about ...

இந்நிலையில், தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ.வான ராஜா சிங்கை இடைநீக்கம் செய்த பாஜக தலைமை, 10 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு தெரிவித்துள்ளது.இதற்கிடையே, ராஜா சிங்குக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாநில பாஜக தலைவர் பாண்டி சஞ்சய் குமாரையும் காவல்துறை கைது செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *