ஒவ்வொரு வேலையிலும் ஒரு புதிய வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் – பிரதமர் மோடி
துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் புதன்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. விரைவில் அந்த இடத்தை நிரப்ப புதிதாக செய்யப்பட்ட ஜெகதீப் தன்கர் வர இருக்கிறார். இந்நிலையில், இன்று வெங்கய்ய நாயுடு பிரிவு உபச்சார விழா மாநிலங்களவையில் நடைபெற்றது.
இதில் பேசிய பிரதமர் மோடி நான் வெங்கய்ய நாயுடுவிடம் மிகவும் நெருக்கமாக பழகி இருக்கிறேன். அவர் பல்வேறு பொறுப்புகளையும் வகித்திருந்தார். அத்தனை பதவிகளையும் முழு அர்ப்பணிப்புடன் செய்துள்ளார் என அவருக்கு புகழாரம் சூட்டினார்.
உங்கள் மதிநுட்பம் சில நேரங்களில் என்னை வியக்க வைத்து உள்ளது. உங்கள் மொழிப் புலமை சிறப்பானது. உங்களின் அனைத்து மொழி திறமையும் நான் கண்டு வியந்து இருக்கிறேன் என புகழாரம் சூட்டினார். நீங்கள் இந்திய மொழிகள் மீது கொண்ட ஆர்வம் உங்கள் செயல்பாடுகளில் வெளிப்படும்.
நீங்கள் அவையை நடத்தும் பாங்கு நேர்த்தியானது என்று பேசினார். இந்தியா தற்போது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த நேரத்தில் வெங்கய்ய நாயுடு தன்னுடைய பணியை சிறப்பாக செய்து முடித்து இருப்பது பாராட்டு கூறியது என்றார்.