கணவனை கொலை செய்து உடலை இரண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மனைவி

சமயபுரம் அருகே கள்ளத் தொடர்பை தட்டி கேட்ட கணவனை கொலை செய்து உடலை இரண்டாக காவிரி, கொள்ளிடம் ஆற்றில் வீசிய சென்ற அதிர்ச்சி சம்பவம் – மனைவி, கள்ளக்காதன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை – கள்ளக்காதலால் கொலையில் முடிந்த சம்பவத்தால் இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிகுடியை சேர்ந்தவர் பிரபு வயது 30, சமயபுரம் மாரியம்மன் கோவில் கடைவீதி பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு வினோதினி வயது 27 இவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். 

பிரபு தினமும் சமயபுரம் கடைவீதி பகுதியில் பூ வியாபாரம் செய்வதற்காக அதிகாலை புறப்பட்டு இரவு 9 மணி அளவில் தான் வீட்டிற்கு வழக்கமாக சென்று உள்ளார்.

இந்த நிலையில் பிரபுவின் சகோதரர் தனது பிரபுவை பார்ப்பதற்காக கடந்த 5ம் தேதி மதியம் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது அண்ணியான வினோதினிடம் அண்ணன பிரபு எங்கு என கேட்டுள்ளார் அதற்கு இன்னும் வீட்டிற்கு வரவில்லை என கூறியுள்ளார் மேலும் கடைவீதி பகுதியில் பிரபுவின் சகோதரர் சென்று விசாரித்த போது அவர் பூ வியபாரம் செய்ய வரவில்லை என சக நண்பர்கள் கூறியதால், சமயபுரம் காவல் நிலையத்தில் தனது அண்ணனை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வந்த செய்த போது வினோதினிக்கும் பாரதி என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது தெரியவந்ததையடுத்து வினோதினியை விசாரணை செய்த போது பல்வேறு திடுத்திக்கிடும் தகவல்களை தெரிவித்ததைக் கண்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

சமயபுரம் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் பாரதி வயது 23 இவர் பிரபு பகலில் வேலைக்கு செல்வதால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனியாக இருக்கும் வினோதினியை ஆசை வார்த்தைகள் கூறி நட்பாக பழகி பின்னர் இருவரும் பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

மேலும் பாரதி மாகாளிகுடி பகுதியில் வினோதினியை தனிமையில் உல்லாசமாக  இருப்பதற்கு இடையூறு இருந்ததால் வினோதினி தனது கணவர் பிரபுவிடம் இந்த இடத்தை விட்டு வெளியே சென்றாள் நாம் நன்றாக இருப்போம் என கூறி கடந்த 3 மாதத்திற்கு முன்பு சமயபுரம் சந்தை கேட் பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். அப்போதுதான்  தன் மனைவி பாரதி என்பவர் பாரதி என்பவருடன் கள்ளஉறவில் இருப்பது தெரிய வந்ததை அடுத்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் சந்தை கேட்பதில் குடியிருப்பதால் பிரபு பூ வியாபாரத்திற்கு சென்ற பிறகு பாரதி அடிக்கடி வீட்டிற்கு வருவார் என்பதால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சமயபுரம் அருகே எஸ்.கல்லுக்குடியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த 10 நாட்களாக பாரதியை பார்க்காமல் இருந்த வினோதினி கணவன் பிரபு வழக்கம்போல் பூ வியாபாரம் சென்ற பின்பு அண்ணா நகரில் இருக்கும் பாரதிய சந்தித்து கணவன் பிரபுவை கொலை செய்ய திட்டமிட்டு அதன்படி கடந்த 4ம் தேதி சனிக்கிழமை இரவு பிரபு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இதனை பயன்படுத்திக் கொண்டு 4 தூக்க மாத்திரைகளை பிரபுவிற்கு கொடுத்து உள்ளார்.

அதன் பின்பு மயக்கத்தில் இருந்த பிரபுவை பாரதி, வினோதினி இருவரும் சேர்ந்து பிரபு கழுத்தை நெறித்தி கொலை செய்து விட்டு அருகில் உள்ள அறையில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து உள்ளனர். 

இதனைத் தொடர்ந்து அருகில் வசிப்பவர்களுக்கு தெரிந்து விடும் என்பதால் பாரதி அவரது நண்பர்களான சமயபுரம் பகுதியை சேர்ந்த ரூபன் பாபு வயது 26, திவாகர் 18, ஸ்ரீவான் 18 ஆகியோர் உதவியுடன் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் கொலை செய்த பிரபுவின் உடலை போலிரோ கார் மற்றும் பிக்கப் வாகனத்தில் வந்து உடலை எடுத்துச் சென்று திருச்சி மன்னார்புரம் அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே பெட்ரோலை ஊற்றி எரித்துவிட்டு அந்த இடத்தை விட்டு உடனே சென்றுள்ளனர்.

பின்னர் மறுநாள் 6ம் தேதி மாலை எரித்த உடலை பாரதி பார்த்தபோது ஐந்தாம் தேதி அதிகாலை மழை பெய்ததால் பிரபுவின் உடல் சரிவர  எரியாமல் இருந்துள்ளது. இதனை பாரதி வினோதினியிடம் தெரிவித்தவிட்டு கள்ளக்காதலன் பாரதி  மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவின் உடலை இரண்டாக வெட்டி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை காவிரி ஆற்றில் தலை முதல் மார்பு பகுதியை விசிவிட்டும், இடுப்பிலிருந்து கால் பகுதியை கொள்ளிடம் ஆற்றிலும் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் உத்தரவின் பேரில் லால்குடி சராக டி.எஸ்.பி அஜய் தங்கம் தலைமையில் சமயபுரம் காவல் ஆய்வாளர் விதுன் குமார் வினோதினி பாரதி உள்ளிட்ட 5 பேர் மீது  வழக்கு பதிந்து அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கள்ளத்தொடர்பால் கணவனை கொலை செய்துவிட்டு மனைவி மற்றும் கள்ளக்காதல் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ததால் இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *