இளம்பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை; பாலியல் வன்கொடுமையா? என விசாரணை

கொட்டாம்பட்டி அருகே இளம்பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை – பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை…வாலிபர் கைது…கோவில் திருவிழா முடிந்த நிலையில் நிகழ்ந்த சோகம்…

கொட்டாம்பட்டி அருகே உள்ள தொந்திலிங்கபுரம் கிராமத்தில் நேற்று இரவு அங்குள்ள கல்லுக்கட்டி கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஊர் மந்தையில் கிராமிய நாடகம் நேற்று இரவு விடிய விடிய  நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் சேவுகபிரியா.  இரவு நேரத்தில் கிராமிய நாடகம் பார்த்துவிட்டு அவரது வீட்டில் உறங்கச் சென்றுள்ளார்.

காலையில் அவரது வீட்டிற்குள் சென்று உறவினர்கள் பார்த்த போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் அவரது உள்ளாடை கலைந்த நிலையில் காணப்பட்டதால் உடனடியாக கொட்டாம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் சாந்தி பாலாஜி மற்றும் மேலூர் டி.எஸ்.பி ஆர்லியஸ் ரிபோனி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டரா ? என்ற கோணத்தில் தடயவியல்  நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உள்ளிட்டவை வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இளம் பெண்ணின்  சடலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இளம்பெண்ணை கொலை செய்த கொலையாளிகள் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சேவுகப்பிரியா வின் அக்காள் மகனான பூமி ராஜ்(21) என்பரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் மர்மமான  முறையில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *