மனைவி தலையில் அம்பி கல்லை போட்டு கொடூர கொலை செய்த கணவன்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈச்சப்பாறை பகுதியில் கட்டிட வேலை செய்யும் கோவிந்தன் என்பவருக்கும் ராதாவிற்கும் திருமணமாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது…

இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கும் நிலையில் இன்று குடிபோதையில் வந்த கோவிந்தன் மனைவியிடம் தகராறு செய்து அருகில் இருந்த அம்பி கல்லை தலையில் தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த நாமகிரிப்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி தலைமறைவான கணவனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *