கள்ளக்காதலுக்கு இடைஞ்சல் என 9 வயது சிறுவனை கொன்ற கொலைகாரன் கைது…

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த 9 வயது சிறுவனை கழுத்தை நெறித்து கொன்று கிணற்றில் வீசிய கொடூர சம்பவம். ஒரு வருடத்திற்கு பின்   கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல். கொலையாளியை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் கோபால்.  இரும்பு வியாபாரியான இவரது மனைவி உயிரிழந்து விட்ட நிலையில் இவரது 9 வயது மகன் பரந்தாமனை கோபால் பரமரித்து வளர்த்து வந்துள்ளார்.  தன் மனைவி இறந்துவிட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த கவுசல்யா, 33, என்பவருடன் கோபால் சேர்ந்து வாழ்ந்துள்ளார். 

இதனிடையே கடந்த 13.02.2022 அன்று திடீரென 9 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்ததாக வந்த தகவலை அடுத்து போலீசார் உதவியுடன் மீட்கப்பட்ட சிறுவனின் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டதால் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 இந்நிலையில் சிறுவனின் தந்தையுடன் குடும்பம் நடத்தி வந்த கௌசல்யா பக்கம் போலீசாருக்கு சந்தேகம் திரும்பிய நிலையில் அவரை பிடித்து நடத்திய விசாரணையில் கவுசல்யா, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேது காமேஷ், 40, என்பவரிடம் கள்ளக்காதல் செய்து வந்ததுடன் கோபால் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு சேது காமேஷை வரவழைத்து உல்லாசமாக இருந்ததாகவும்  இதை கண்ட சிறுவன் பரந்தாமன் அதை, தன் தந்தையிடம் கூற போவதாக தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யாவும் சேது காமேஷும் சிறுவனை கழுத்தை நெறித்து கொன்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் போட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கெளசல்யாவை கைது செய்த ஏழாயிரம் பண்ணை போலீசார் சேது காமேஷை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *